வீரக்கொள்ளியை தானமாய் தருகிறேன்
( மருதமுனை நிஸா )
காவல் துறையினரே
உங்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
ஒவ்வொரு வீட்டு
கதவுகளின் அருகில்
கொஞ்சம்
உங்கள் இருக்கைகளை
இட்டுக்கொள்ளுங்கள்
என்று தயவாக கேட்கிறோம்
வீட்டுக்கு காவலனாக இல்லை
நாட்டுக்கு காவலனாக
இனியும் பார்த்திருக்க
எம்மால் முடியாது
தனித்திரு என்று
சொல்லி விழித்திருக்கும்
உம் போன்ற காவல்துறையினரை
கணக்கில் எடுப்பார் கூட இல்லை
அடக்க முடியாத
நிலை வரும் போது
ஆயுதம் ஏந்துவதில் தவறில்லை
பின் என்னதான் சொல்ல
எமக்கு வேறு வார்த்தை
தெரியவில்லை
தடியினால் வாங்கிய அடியினால்
மீண்டும் எழுந்து வருகிறார்கள்
உடைத்துப்போடுங்கள் காலை
காலைக்குள் போடுவதுபோல்
அடைத்து போடட்டும் வீட்டில்
எட்டு மணியை விட்டு விடுங்கள்
சூரியன் மறையும் நேரத்தையாவது
மனதில் வைத்து
காவலுக்கு வாருங்கள்
காக்கி சட்டையில் இல்லை
கலர் சட்டையில்
ஏனெனில் உங்களை
சேட்டை செய்ய காத்துகிடக்கின்றன
சில அசட்டு போக்கர்கள்
உம்மை சீண்டியும் பார்ப்பர்
கடற்கரைக்கு வாருங்கள்
அங்கு குழுமியிப்போரை
வெழுத்து கட்டுங்கள்
ஆணாகட்டும் பெண்ணாகட்டு
அடங்கியிரு வீட்டில் என்று
அடித்து சொல்லுங்கள்
பொல்லு வேண்டுமானால்
சொல்லுங்கள்
வீரக்கொள்ளி இருக்கிறது
தருகிறோம்
அடுப்பெரியா விட்டாலும்
பறவாயில்லை
நாட்டை காப்பாற்ற
எம் பங்கிற்கு
வீரக்கொள்ளியையாவது
தானமாய் தருகிறோம்
எம்மிடம் இருப்பது
உங்களுக்கு உதவ வீரக்கொள்ளி மாத்திரமே

