Binth ameen
Seusl

மனித இனத்தை
மண்ணோடு அழிக்க வந்த நீ
மலரவும் செய்திருக்கிறாய்
மங்கிப்போன
மனதுக்கிலேதான வாழ்வை
ஒற்றுமை குலைந்து
இரத்தம் தேய
அடித்துக்கொண்டவர்களை
ஒரு குடையில் சேர்த்த பெருமையும் உனக்கே தான்..
இனமத ஜாதிகள் அத்தனையும் பொய்யென்று ஓர் நிமிடத்தில் காட்டினாயே
அகமகிழ்ச்சிதான் என்றும் நிலைக்குமென ஆழமாய் உணர்த்தினாயே
அடுத்தவன் நலவு எமக்கு நல்லது
எனும் அற்புதத்தை உலகுக்கு லேபல் இட்டாயே
துன்பத்திலும் நன்மையுண்டு -கொரோனா நீ பேருதாரணமாய் திகழ்கிறாயே
