எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்


நாட்டின் பொருளாதார நிலைமை கவலைக்கிடமான நிலையில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு  எதிர்ப்புத் தெரிவித்து இன்று (17) எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக மக்கள் குழுவொன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது.

மின்சார கட்டண அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்துங்கள் என்ற கோசத்தின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அமைச்சின் பிரதான வாயிலை மூடுமாறு பதாதை ஒன்றையும் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் பிரதான வாயிலை முற்றுகையிட வேண்டாம் என்றும், அப்படி செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.