கொவிட் தொற்றால் ஊடகவியலாளர் பிரகாஷ் மரணம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் நேற்று உயிரிழந்தார்.

26 வயதான அவர், கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டிருந்த இவரின் மரணச் செய்தி பல ஊடக நட்புகளுக்கு சோகத்தை வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.