தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை முன்னர் காணப்பட்ட வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடித்தாலும் மாகாணங்களுக்கு உட்பட்டுபேருந்து சேவைகள்முன்னெடுக்கப்படும் எனவும் அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடித்தால் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறமாட்டதெனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

