துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகிய சிறுவர்களின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்ய மாகாண மட்டத்தில் நடவடிக்கை.


பல்வேறு வகைகளிலும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்ற பிள்ளைகளால் வழங்கப்படும், குறித்த சம்பவத்திற்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும்.

எனினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடுவதால்,

மேற்படி சாட்சிகளை - ஒளிப்பதிவு செய்து பெற்றுக் கொண்டு சமர்ப்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள், 1999 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சாட்சியங்கள் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய - 2001 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் காணொளிப்பதிவு செய்யும் அலகொன்றைத் நிறுவி சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் - தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்படி வசதிகளை மாகாண மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக,மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது அலகுகளை நிறுவுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது  குறிப்பிடதக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.