மீண்டும் 7ஆம் திகதிக்கு பின்னர் பயணத் தடையாகுமா?

தற்போது அமுலில் உள்ள பயணத் தடைகளை 7ஆம் திகதிக்குப் பின்னரும் நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

7ஆம் திகதியின் பின்னரும் பயணத் தடை நீடிக்கப்படும் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், பயணக் கட்டுப்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அனைத்தையும் நம்ப வேண்டாம் என்றும் 

ஏதேனும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் எனவும் கூறியுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.