சுதந்திரம்🇱🇰🕊️
Binth ameen, Tr (BA) seusl
சுதந்திரம் எல்லோருக்கும் இயற்கையாகவே தேவைப்படுமொன்று🐣.சில பறவைகள் சிறைப்பட்டு கூண்டில் இருக்கும் போது அதன் பார்வை ,ஏக்கம் எம்மை கவலையடையச் செய்யும் .எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அப்போது எம்மில் நிழலாய் ஓடும்🕊️. நம் நாடும் முன்னர் வெளிநாட்டவரால் சிறைப்பட்டே இருந்தது.அப்போது நம் வளம், நிலம் அத்தனையும் அவர்களுக்கே உரித்தாயிற்று🏞️. எம் நாட்டைக் கொண்டு அவர்கள் பணமும், பொருளும் சம்பாரித்துக்கொண்டார்கள்💰.
இலங்கை மக்களின் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் சுதந்திரத்துக்கு வழிகோலியது🇱🇰.நம் நாடு நமக்கே மீண்டும் உரித்தானது.அப்போதுதான் எமக்குள் தேசிய உணர்வு மலர்ந்து நாட்டுப்பற்று வேரூன்றியது♥️.
அன்று ஒன்றுபட்டதால் ஒருநாட்டையே உயிர்ப்பித்தோம்☸️🕉️☪️✝️.
இன்றும் ஒன்றுபடுங்கள்
இப்போதே ஒன்றாயிருங்கள் ☺️
உலகை வெல்வதற்கும் அச்சுறுத்தல்களைbஅழிப்பதற்கும் ஒன்றுபடலே ஒளியாயிருக்கும்🌈
நாட்டை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் நம் கண்ணாய் நேசித்து ஜாதி மதம் பாராமல் ஜொலிக்கச்செய்வதை நோக்காய் கொண்டு இனிமேலாவது செயற்படுவோமாக😊