கொவிட் 19 பரவல் காரணமாக கொழும்பில் சில இடங்கள் தொடர்ந்தும் முடக்கத்தில் இருப்பதால் மக்கள் மிகவும் கஷ்டமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கு
காலடிக்கு பொருட்கள் வந்தாலும் அவற்றை வாங்குவதற்கு கையில் காசு இல்லை என மக்கள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு 15, அழுத் மாவத்தை மக்கள் இன்று பாதைக்கு இறங்கியுள்ளனர். மக்கள் வருமானம் இன்றி இருக்கும் இந்நிலையில் முடக்க நிலை நீடிக்குமாயின் உண்ண வழியின்றி இன்னும் சிரமப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

