இலங்கைச் சுற்றுலாத் துறையை மேலும் உயர்தரத்திற்கு வளர்த்துச் செல்வதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இவற்றுக்கு எல்லாம் மேலானதா, வேற்று நாட்டவர்களைக் கவரும் எமது உயரிய தரம் ஆனது - எமது விருந்தோம்பல் பண்பு என்றே நான் கருதுகின்றேன். அதுவே எம் மீது அடுத்தவர்களுக்கு மதிப்பையும் ஏற்படுத்துகின்றது.
அண்மையில் - கொரோனா அச்சுறுத்தலால், தத்தமது சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாது இங்கு சிக்கித் தவித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கையர்கள் விருந்தோம்பி பராமரித்த முறையானது - அனைத்துலக ஊடகங்களில் பெரிதும் போற்றுதலுக்கு உள்ளாகியிருந்தமை ஒரு பெருமைக்குரிய விடயம் ஆகும்.
எதிர்காலத்தில், புதிய உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் - ஏற்கெனவே பாராட்டுதலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைச் சுற்றுலாத் துறையை மேலும் உயர்தரத்திற்கு வளர்த்துச் செல்வதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

