ஜனாதிபதி சட்டத்தரணி, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி சட்டத்தரணி, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
நேற்று (ஆகஸ்ட் 16) கொழும்பில் நடைபெற்றது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்  ஏ. எல்.எம். உவைஸ் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் ஸரூக் ஏற்பாட்டில்  இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடமேல்மாகண ஆளுநர்  ஏ.ஜே. எம். முஸம்மில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை தலைவர்கள், பிரதேச சபை தலைவர்கள், உள்ளூராட்சிமண்ற உறுப்பினர்கள், முன்னாள் தூதுவர்கள், நிறுவன தலைவர்கள், வியாபாரிகள், சர்வமத தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சில்மியா யூசுப்



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.