மே 17 ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

மே 17 ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் .

கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் இப்போது
அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடரும்.

அத்துடன் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை  தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

இதனை தொடர்ந்து கொழும்பு, கம்பஹா தவிர ஏனையஅனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்கு தளரும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்த முன்னர் விடுத்த அறிவிப்பு அப்படியே இருக்கும்.ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியவசிய சேவைகள் நடக்கும்.

ஜனாதிபதி ஊடக பிரிவு
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.