பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணிகள் ஆரம்பம்.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகள், வியாழக்கிழமை (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்பங்கள், மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும். விண்ணப்பங்களை, ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும்.
2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.
இதற்கான வழிகாட்டி நூற்களை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்களுக்கு தற்பொழுது பெற்றுக்கொள்ள முடியும்.

