யஹூதிகளின் சதி வலையில் சிக்கித் தவிக்கும் நம் சமூகம்.
(Face app)
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து நாசமாக்க வேண்டும் என்ற யஹூதிகளின் நேரடி திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு இன்று பல வருடங்கள் கடந்து விட்டது.
என்றாலும் தமது முயற்சியை கைவிடாத யஹூதிகள் இன்று சிந்தனை போராட்டத்தின் மூலம் நம் சமூகத்தை பாவத்தின் பக்கம் அழைத்து செல்வதை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
அன்று ஜோசியம், குறி பார்த்தல் போன்றவற்றை நேரடியாகவே ஜோசியர், குறி பார்ப்பவர்களிடம் சென்று பார்த்த சமூகம் இன்று முகநூலினூடாக யஹூதிகள் அறிமுகப்படுத்தியுள்ள சில சொப்ட்வெயார்களினூடாக பார்த்து வருவது கவலைக்கிடமான விடயமே.
நம்மை பற்றி எதிர்வு கூர்வதும், நம்மை பற்றி நாம் அறியாத நமது இறந்த கால, எதிர்கால பல தகவல்களை எமக்கு சொல்லித்தருகிறது என்றால் இந்த சாப்ட்வெயார் ஈமானை பறிக்கும் சாஸ்திரம், குறி, ஜோசிம் என்பதில் சந்தேகம் இல்லை.
இறைவா நீயே எமது ஈமானை காப்பாயாக!!!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், (அவ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்: 4488., அத்தியாயம்: 39.
எனவே நேரடியாக ஜோசியரிடமோ அல்லது சாஸ்திரரிடமோ ஜோசிம், குறி, சாஸ்திரம் பார்ப்பதும் இணையத்தில் சொப்ட்வெயார்களில் பார்ப்பதும் இரண்டுமே ஒன்றுதான்.
இப்பாவத்தில் இருந்து தவிர்ந்து கொள்வோமாக.
இறைவா நவீனமாக பரவி வரும் பாவங்களில் இருந்து எம்மையும் எம் சமூகத்தையும் பாதுகாப்பாயாக ஆமீன்.
அஷ் - ஷேக் மபாஸ் (ஹாமிதீ)

