கொழும்பின் பல பகுதிகளில் நாளை (10) நீர் விநியோகம் தடை


கொழும்பின் பல பகுதிகளில் நாளை (10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பின் 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை மாலை 5.00 மணி முதல் நாளை மறுதினம் (11) காலை 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.