ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அடையாள அட்டை அறிமுகம்


கல்வி அமைச்சின் ஊடாக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளைஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் இன்று (06) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கல்வி அமைச்சின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.