ஹைதி தீவில் பயங்கர நிலநடுக்கம்

ஹைதி: கரீபியன் தீவுகளில் ஒன்றானஹைதி தீவில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் 304 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

ஹைதி தீவின் தலைநகர் போர்ட் பிரின்ஸில் இருந்து மேற்கு பகுதியில் 125 கி.மீட்டரை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் ஹைதி தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பதட்டத்துடன் வீடுகளில் இருந்து விழுவதை பார்த்து கொண்டு இருக்கும் காட்சிகள் வீடியோக்களாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.