( மினுவாங்கொடை நிருபர் )
இலங்கையில் இதுவரை ஏற்றப்பட்ட கொவிட் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் எனத் தெரியவருவதுடன், கொவிட் மரணங்களில் இது 3.38 வீத பதிவாகும் என, சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரை, இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.