இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்காக
2021 ஆகஸ்ட் 09 ஆம் திகதி சாரநாத்தில் இந்திய மகா போதி சங்கத்தினரால் இலங்கை இந்திய ஆசிர்வாத பூஜை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் இந்தியா இலங்கை இடையிலான வலுவான இருதரப்பு பங்குடைமைக்காகவும் வழிபாடுகள் நடப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ இந்திய உயர் ஸ்தானிகர் திரு.கோபால் பாக்லே ஆகியோர் இந்த நிகழ்வுகளில் மெய்நிகர் மார்க்கமாக கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் புத்தகயா, லும்பினி, கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட இந்தியா முழுவதும் காணப்படும் பல்வேறு ஆலயங்கள் மற்றும் அலுவலகங்களும் இந்த வழிபாடுகளில் மெய்நிகர் மார்க்கமூடாக பங்கேற்றிருந்தனர்.
சிறப்புக்கள் பொருந்திய சுபநாளில் இலங்கை மக்களிற்காகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்காகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடேஸ்வர பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆலயத்தின் பக்தரான பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்கான தனது பல்வேறு விஜயங்களின் போதும் இவ்வாலயத்திற்கு சென்று வழிபடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்தியாவில் இரண்டாவது கொவிட் 19 அலை தீவிரமடைந்த நிலையில் இந்தியாவில் உள்ள தமது சகோதரர்களின் நலன்களுக்காக இலங்கை முழுவதிலும் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களால் விசேட வழிபாடுகள் மத நிகழ்வுகள் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இரு தரப்பினரதும் நலனுக்காக பரஸ்பரம் இவ்வாறான வழிபாடுகளை மேற்கொண்டமை இருநாடுகளுக்கும் இடையிலான நாகரீக தொடர்புகள் மற்றும் மக்கள் - மக்கள் தொடர்புகளை சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது.
இந்தியாவின் புனிதமான இந்த இரு ஸ்தலங்களிலும் நடைபெற்றிருந்த விசேட வழிபாடுகளின்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய தற்போதைய பதவிக்காலத்தில் முதலாவது வருடத்தை நிறைவு செய்தமையை முன்னிட்டும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.