மிக வேகமாக கொரோனா நோயாளர்கள் பதிவாகி வரும் 6 மாவட்டங்கள்.


இலங்கையில் 6 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

குருநாகல், புத்தளம், கொழும்பு, காலி, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளிலுள்ள கட்டில்களை விடவும் அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருவதாக அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவிக்கின்றார்.

எனவே, நாடு தற்போது மிக மோசமான நிலையை நோக்கி நகர்ந்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.