பயணக்கட்டுபாடு தளர்வின் பின்னரான வாகன விபத்துக்களில் 11 பேர் பலி

காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதில் 8 பேர் நேற்று (21) இடம்பெற்ற விபத்துகளால் உயிரிழந்தவர்கள் எனவும், ஏனைய 3 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில் பாதசாரிகள் 2 பேரும், உந்துருளிகளில் பயணித்த 6 பேரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்த 2 பேரும், பாரவூர்தியில் பயணித்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், பாதசாரிகள் மற்றும் சிறிய ரக வாகனங்களில் பயணிப்பவர்களே அதிகளவில் விபத்துக்களால் உயிரிழப்பதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.