ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பிரதான காரியாலயம் நேற்று (04) செவ்வாய்கிழமை மாலை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவால் கிண்ணியாவில் திறந்துவைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ,திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
