இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயத்தில் பொங்கல் விழா


இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயத்தில் 2022.01.25 ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் கே. தினேஷ் தலைமையில் வெகுவிமர்சையாக பொங்கல்விழா கொண்டாடப்பட்டது.

இப்பொங்கள் விழாவில் சித்திரப்போட்டி ,கோலப்போட்டி ,கயிறு இழுத்தல் என பல போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

 இந்நிகழ்வுக்கு அயல் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கிராம நிலதாரி ,அபிவிருத்தி உத்தியோகத்தர், மதமுக்கியஸ்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பல இன்னோரன்ன கலைநிகழ்வுகள் அரங்கேறியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.                                          தகவல் -பின்த் அமீன்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.